திங்கள், 10 ஜனவரி, 2011

எல்லாம் நன்மைக்கே

'பூமியில் தர்மத்துக்கு வாட்டமும் அதர்மத்துக்கு எழுச்சியும் நேரும்போதெல்லாம் வந்து பிறக்கிறேன்' [யதா யதா ஹி---- கீதை 4-7] என்றும் நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும்,சிறந்த தர்மத்தை நிலைநாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் [பரித்ராணாய----கீதை4-8] என்றும் ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளிச் செய்துள்ளார். எனவே பெருமாளும் பிராட்டியும் இணைந்து பூமியில் வந்து அவதாரமாகிய நாடகத்தை நடத்திக்காட்டுவது எல்லாம் நம்முடைய நன்மைக்காகவே!
இது தொடர்பான ஒர் நகைச்சுவை நிகழ்ச்சி
ஸ்ரீ உ.வே. ஸேவா ஸ்வாமி அவர்களின் பேச்சில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவை இழையோடும். வட இந்தியாவில் ஒருமுறை ஓரிடத்தில் உபன்யாஸம் செய்து முடித்ததும் ஒருவர் அவரிடம் வந்து பெருமையுடன் "ஸ்வாமி! ராமர், க்ருஷ்ணர் போன்ற தெய்வங்களெல்லாம் பாரதத்தின் வட தேசமாகிய எங்கள் பகுதியில்தான் அவதரித்துள்ளனர். உங்கள் பகுதிக்கு அந்த பாக்யம் கிடைக்கவில்லையே" என்று வினவினார். ஸ்வாமி புன்னகையுடன் " தர்மத்துக்கு அழிவு ஏற்படும்பொழுது அங்கு, அப்பொழுது வந்து அவதரிப்பதாக பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரே. இங்கு அதற்கு ஏற்பட்ட அவசியம் எங்கள் பகுதிக்கு நேரவில்லையென்பதே காரணமென நினைக்கிறேன்" என்று கூற கேட்டவர் தலை குனிந்தவராய் அங்கிருந்து அகன்றுவிட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக