புதன், 19 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம்




வேடிக்கைப் பாட்டு

அருக்கஞ்சட்டியில் தண்ணீரை வைத்து
அக்கரைக்கிக்கரை நீந்தியும் பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

நல்ல எண்ணையிலே தோசையைப் போட்டு
நாற்பது நாளைக்குத் தின்னுமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

தாம்புக் கயிற்றை பந்தாகச் சுற்றித்
தலைக்கு வைத்துப் படுத்துமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

மொந்தம் பழத்திலே முப்பது சீப்பு
முந்நூறு நாளைக்குத் தின்னுமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

நாலு நாளைக்கொருதரம் எண்ணைய்
நன்றாகத் தேய்த்துக் குளித்துமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

மோரை விலக்கிப் பாலைச் சொரிந்து
முப்பது நாளைக்குத் தின்னுமே பார்த்தேன்
அப்படி என்னுயிர் போகவுமில்லை
ஆயனெழுத்துக்கு யானென்ன செய்வேன்?

கம்பநாட்டாழ்வான் [கம்பம்+நாட்டு+ஆழ்வான்]

மாறன் சடகோபன் ப்ரகாசிப்பித்த ப்ரபத்தி மார்க்கத்துக்குத் தன் இராமாவதாரச் செய்யுளாலும், சடகோபனுக்கு அந்தாதியாலும் இவன் ஜயஸ்தம்பம் [கம்பம்] நாட்டினானாதலின் இவன் கம்ப நாட்டாழ்வானானான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக