திங்கள், 3 ஜனவரி, 2011

ஸ்ரீக்ருபா என்று முதலில் ஏன் தாயாரின் அருளை நாட வேண்டும்?

திருமகளை முன்னிட்டுக்கொண்டே எம்பெருமானை அடைய வேண்டும் என்பது நம் ஸம்ப்ரதாயம். நம் ஆசார்யரான ஸ்வாமி தேசிகன் இவளை நம் தாயென்றும் அன்பாலே தம் குழந்தைகளை அரவணைத்துச் செல்பவள் என்றும் ’தண்டித்தல்’ என்பதையே அறியாதவள் என்றும் கூறுகிறார் தம் ’யதிராஜ ஸப்ததி’ என்னும் ஸ்தோத்திரத்தில். தம் குழந்தைகளுக்கு அருள்புரிய இவள் எண்ணினால் பெருமாளும் மனைவி கூறும் நல்வார்த்தகளை மறுக்காது அருள் புரிவார். இவ்விருவரும் மனமொத்த, கருத்தொருமித்த தம்பதி என்று வேத, இதிஹாஸ, புராணங்கள் அனைத்தும் கூறுகின்றன. எனவே தாயாரின் அருள் என்பது பெருமாளின் அருளையும் சேர்த்தே பெற்றுத் தரவல்லது.

ஜயந்தி :

நாளை ஹனுமத் ஜயந்தி[4-1-11]. ’எடுத்த காரியம் நிறைவேற’ சுந்தர காண்டம் பாராயணம் செய்யவேண்டுமென்பதை அறிவோம். இந்த இடுகை தொடங்கும் நேரத்தில் ஹனுமத் ஜயந்தி அமைந்திருப்பது வெற்றிக்கு அறிகுறி எனக் கொள்ளலாம் அன்றோ!

‘ஜயந்தி’ என்ற வடமொழிச் சொல் ஆவணி மாதத்து கிருஷ்ண பக்ஷத்து அஷ்டமி திதியுடன் சேரும் ரோஹிணி நக்ஷத்திரமாகும்.இந்நாளில் அவதரித்தவர் ஸ்ரீ க்ருஷ்ண பகவான் ஒருவரே. எனவே கிருஷ்ணன் அவதரித்த தினத்தை மட்டுமே ஜயந்தி என்ற சொல்லால் குறிக்கலாம். ஆனால் காலப் போக்கில் ’பிறந்த தினம்’ என்ற பொருளில் வழக்கில் வந்துவிட்டது என்பது செய்தி!

1 கருத்து: