வெள்ளி, 1 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10
நோற்று சுவர்க்கம்----

இதுவரை நான்கு பாட்டுக்களாலும் தங்களைப் பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பெண்களை நாராயணனைப் போற்றிப் பாடுவதாகிய இந்த நோன்பினைக் கைக் கொள்ள அழைத்தாள். இப்பாட்டில் எழுப்பப்படுபவள் தாந்த்ரீகமான சில முறைகளைக் கையாளுபவள்.

இவள்பிற தேவதைகளைப் பூஜிப்பவள். ஸ்வர்கம் முதலான சில இன்பங்களை உயர்வாக மதிப்பவள். அவைகளை அடைவதற்கு வேண்டிய வழிகளில் சென்று கொண்டிருப்பவள். இவள் தூங்குகிறாள் என்று சொல்வதற்குப் பொருள் வேறு விதமானது. அதாவது பெருமாளைப் பற்றி நினைக்காமல் அஷ்டாங்க யோகம், ஹடயோகம் முதலான யோகாப்யாஸங்களைச் செய்து தன் மனம், அறிவு, சக்தி ஆகியவைகளை வளர்த்துக் கொள்பவள். அதைக் கொண்டு நாராயணனை நினையாமல் பிற தெய்வங்களை த்யானிப்பதற்கு மிகவும் பாடுபடுபவள்.
இவ்விதம் சக்திகளை வளர்த்துக் கொண்டவளாதலால் இவளை ‘அம்மனாய்’ என்று மரியாதை தோற்ற அழைத்து ’இவ்விதம் சொர்காதி இன்பங்களை அடைவதற்கு நீங்கள் விரதம் பூண்டு நோற்கிறீர்கள் அல்லவா என்று பாட்டைத் தொடங்குகிறாள்.

‘மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்’ என்றது’ நீங்கள் வாயில் கதவுகளைத் திறக்காவிட்டாலும் வாய் திறந்தாவது பதில் சொல்லக்கூடாதா என்று கேட்கிறாள். அம்மனாய் என்று முதலில் அழைத்த அப்பெண்ணைப் பின்னர் ‘நன்கலனே’ என்று அழைக்கிறாள். நன்கலம் என்பதற்கு ‘ஸத்பாத்ரம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், அதாவது ‘தகுதியை உடையவள்’என்பது பொருளாகும். இதுவரை இவள் செய்துவந்த யோகங்கள், அனுஷ்டானங்கள் இவற்றால் நோன்புகள் நோற்கும் சக்தியைக் கைவரப் பெற்றுள்ளாள். எனவே அந்தத் திறனைக்கொண்டு நாராயணனைப் பாடி பஜனம் செய்து இந்த மார்கழிநோன்பினையும் நோற்க’நீ தகுந்த பாத்திரமாயிற்றே’ என்று கூறி அவளை அழைக்கிறாள்.

அடுத்து திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தவராகிய  ஸ்ரீமந்நாராயணன் நாம் வாயைத் திறந்து அவனைத் துதித்தால் நம்மை நிச்சயமாக காப்பாற்றுவான் என்பதை அவளுக்கு வற்புறுத்துகிறாள். பகவான் உலகத்துக்கு எல்லாவிதமான புண்ணியத்தையும் கொடுப்பவன்,மேலும் நம்மையெல்லாம் காப்பாற்றி அதனால் தானும் புண்ணியத்தை அடைபவன் என்று இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளும்வண்ணம் ‘புண்ணியனால்’ என்று கூறியுள்ளாள்.

தொடரும்          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக