வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அத்யாத்மசாஸ்த்ரம்

இடுகை 6

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன?இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?இதற்குத் தம் ‘ந்யாய ஸித்தாஞ்ஜனம்’ என்னும் நூலில் ஸ்வாமி தேசிகன் விடையளிக்கிறார். “மஹனீயர்களிடத்தில் உண்டாகும் ப்ரீதியே பக்தியாகும்” என்கிறார்.எனவே நம்மைவிட உயர்ந்தவர்கள், பெரியவர்கள், நம் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் ஆகியோரிடத்தில் ஏற்படும் அன்பை பக்தி என்றும் நம்மைவிடச் சிறியவர்களிடத்தில் ஏற்படும் ப்ரீதி,ஆசையே அன்பு என்றும் கூறப்படுகிறது.பகவானிடம் ,பெற்றோர்களிடம், ஆசார்யர்களிடம்நமக்கு உண்டாவது பக்தி; நம் குழந்தைகளிடம் உண்டாவது அன்பு.(கணவன் மனைவி விஷயத்தில்? அது உங்கள் சிந்தனைக்கு!).
’ஸ்ரீ ராமசந்திர சுக்ல’ என்னும் ஒரு ஹிந்தி எழுத்தாளர் இதற்கு “பக்திக்கு இடமாவது மனித மனமே. ஒரு விஷயத்தைக் குறித்து மதிப்பும் (மரியாதையும்), அன்பும் மனதில் சேரும் பொழுது அங்கு பக்திஉதயமாகிறது.” என்று அழகாக விளக்கம் அளிக்கிறார்.

மனிதனின் மனம் பரமாத்மாவிடம் பல மதிப்பிற்குரிய விஷயங்களைக் கண்டதும் அவன்பால் ஈர்க்கப்படுகிறது. எல்லையற்ற அழகு, குணநலன்கள், சக்தி, வள்ளன்மை இவைகளின் மொத்த உருவமாக அவன் பரமாத்மவைக் கருதி அவரைத் தன் உள்ளத்தில் நிறைத்துக் கொள்கிறான். எங்கும் நிறைந்தவன், எல்லாம் நிறைந்தவனாகிய இந்தபகவானை நினைக்கும்தோறும் இவன் மனம் தழுதழுக்கிறது. அவனைக் காணவும் ,அதற்குக் காரணமாக அமையும் அவன் காட்டிய பாதையில் நடக்கவும் ஆசை உண்டாகிறது.அன்பினால் நிறைந்த அவன் மனம் எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிக்கிறது. எனவே பக்தி என்பது உள்ளத்தில் தோன்றுவது. புத்தியில் (அறிவினால்) தோன்றுவதல்ல. புத்தியைக் கொண்டு பக்தி செய்வது மூக்கினால் சாப்பிடுவதும், காதினால் வாசனையை முகர்வதற்கும் ஒப்பாகும் என்கிறார் மேலேகண்ட ஹிந்தி எழுத்தாளர்.

இத்தகு பக்தியையே நம் விசிஷ்டாத்வைதம் வற்புறுத்துகிறது. ‘ஞானத்தால் மோக்ஷம்’ என்பதை மறுத்து ’பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்துக்குச் சிறந்த வழி’ என்று காட்டியவர் ஸ்ரீ ராமாநுஜரே.

இந்த பக்தியைச் செய்வது எப்படி? இதை ஒரேவிதமாகச் செய்வதா? அல்லது பலவிதமான பக்திகள் உண்டா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக