வியாழன், 27 ஜனவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்



தத்வ விசாரம்- இது நமக்குத் தேவைதானா?
ஒருவன் தன்னைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள இவை தேவையே. இந்த அறிவே உண்மையான அறிவாகும். திருவள்ளுவர் தம் நூலில் ‘அறிவுடைமை’ என்னும் அதிகாரத்தில் ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்கிறார். ஒருவன் பெற்ற அறிவே அவனைக் காக்கும் ஆயுதமாகும். அது பிறராலும் பகைவராலும் கூட அழிக்க முடியாத கருவி என்கிறார். எனவே தன்னைக் காத்துக்கொள்ள தேவையான இந்த அறிவை ஒருவன் பெறவேண்டும் என்பது அவசியமாகிறது. 

இந்த அறிவை எப்படி ஈட்டுவது? நம் ஸம்ப்ரதாயம் இதற்கு வழிகாட்டுகிறது. வேதங்கள், உபநிஷத்துக்கள் ஸ்ம்ருதிகள் புராணங்கள் இதிஹாஸங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் ஆசார்யர்கள் மற்றும் நம் ஆன்றோர்களின் அரும்படைப்புகள் இவையனைத்துமே நமக்கு இவ்வறிவினைப் போதிக்கவல்லவை. இவை தத்வ, ஹித, புருஷார்த்தங்கள் என்னும் மூன்று தலைப்புகளில் அறிய வேண்டியவை.

இவைகளைச் சுருக்கமாகக் கூறினால்

தத்வம்-  நம்மைப் பற்றிய அறிவு
ஹிதம்-  நமக்கு நல்லவை எவை என்பதைப் பற்றிய அறிவு
புருஷார்த்தம்-  நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்குக் கிடைக்கும் பலன்பற்றிய அறிவு
.
நம்மைப் பற்றி, நமக்குநல்லவைகளைப்பற்றி,நமக்குண்டான நல் வழிகள், அவ்வழியில் செல்வதனால் நாம் பெறவிருக்கும் நற்பலன்கள் இவைகளைப்
பற்றிய அறிவைப் பெறுதலே போதுமா? பலனைப் பெற்றுவிடலாமா?
இக்கேள்விக்கு விடை திருக்குறளில்! 





1 கருத்து:

  1. SRINIVASA PARTHASARATHY to Hema
    show details Jan 17 (11 days ago)
    Dear Hema,

    Eventually got to visit your fine blog. Congratulations for having been so thoughtful in designing the blog and arranging contents.
    The contents are simple, thought-provoking and stimulating. The questions raised at the end add to the interest flavour. Very thoughtful to have started with the NRK page.

    Fond regards,
    Parthasarathy

    பதிலளிநீக்கு