சனி, 15 ஜனவரி, 2011

ஆசார்யர் பெருமை


ஆசார்யரே நாம் கண்ணெதிரில் காணும் தெய்வம் என்கிறார் ஸ்ரீ ராம பிரான். ஆசார்யரைப் பெறாத ஒருவனது வாழ்க்கை வீணாகிறது. அது பழமற்ற மரம்போல, விளக்கற்ற வீதிபோல, நீரில்லாத குளம் போல, பூச்சூடாத பெண்போல, நெற்றிக்கிடாத முகம் போல, ஒளியில்லாத வானம் போல, ஸ்வரம் இல்லாத சங்கீதம் போல, தந்தியில்லாத வீணை போல,
ஸாரதியில்லாத ரதம் போல என்பர் பெரியோர்
.
செல்லும் வழி, சேருமிடம் தெரியாமல் வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்பவர்கள் ஆசார்யர்கள்.எண்ணை தேய்த்துக் குளிப்பதற்காக ஒரு பெண் தன் நகைகளைக் கழற்றி ஒரு சிகப்புப் பட்டுத் துணியில் முடிந்து வைக்கிறாள். குளித்துவிட்டு வந்தபின் வைத்த இடத்தை மறந்ததால் அதை மிகுந்த கவலையுடன் வெகு நேரம் வீடு முழுவதும் தேடுகிறாள். நெடு நேரம் கழித்து அச்சிவப்புப் பட்டுத்துணி கண்ணில் பட்டதுமே கவலையெல்லாம் நொடியில் மறந்து ஆறுதல் அடைகிறாள். அப்பட்டுத்துணி கண்ணில் பாட்டாலே போதும் நகை கிடைத்த மகிழ்ச்சி! அதுபோல் ஸதாசார்யரைப் பெற்றுவிட்டாலே போதும். நம் வாழ்வெனும் ஓடம் கரை சேர்ந்துவிடும் என்று கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம்.


NRK ஸ்வாமி பக்கம் - சிந்தனைப் பெட்டகம்


NRK ஸ்வாமிஎழுதிய நாள்-20.12.1948


1] 12 ராசிகளை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய பாடல் [சொற்றொடர்]


ஆடு மாடு இரட்டை நண்டு
 அரி சிறுமி தூக்கும் தேளும் 
விற்பெருமீன் குடமும்
 மீனும் ராசியாவன


2] ஏழை, இடையன், இளிச்சவாயர் என்கிறார் இடைக்காடர் என்னும் தமிழ் புலவர் ராமன், கிருஷ்ணன், ந்ருஸிம்ஹன் என்னும் தெய்வங்களை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக